இந்த சங்கை நம் முன்னோர்கள் ஆதி காலத்தில் இருந்து இரண்டு நோக்கத்திற்காக பயன்படுத்தி
வந்தார்கள்.
1) சங்கை ஊதி ஒலி எழுப்புவதற்கு
2)கடவுள் வழிபாட்டிற்கு பயன்படுத்தி வந்தனர்
நல்ல காரியங்கள் முதல் யாராவது இறந்தால் கூட இந்த சங்கை ஊதி தான் ஒலி எழுப்புவார்கள்.
நீங்கள் இதுவரை அறியாத ஒரு அறிவியல் விஷயமும் இந்த சங்கிற்குள் ஒளிந்து இருக்கிறது.
தினசரி இந்த சங்கின் ஒலியை கேட்டு வந்தால் இதய நோய் களிலிருந்து பாதுகாப்படுவோம்
என்று அறிவியல் கூறுகிறது. எனவே மக்கள் இந்த புனித சின்னத்தை பெரும்பாலும் வீட்டில்
வைத்து இருக்கிறார்கள். சரி இதை எப்படி எந்த திசையில் வீட்டில் வைத்து வழிபட வேண்டும்
என்பது குறித்து வாஸ்து சாஸ்திரம் சில டிப்ஸ்களை கூறுகிறது.
சங்கு வழிபாடு :
பூஜை விதிகள்
உங்கள் வீட்டில் நீங்கள் சங்கை வைத்து வழிபட நினைத்தால் குடும்ப உறுப்பினர்களுள் ஒருவர்
அதை ஒரு நாளைக்கு காலையில், மாலையில் என இரண்டு வேளைகளில் ஊதி ஒலியை எழுப்ப
வேண்டும்.